Wednesday, September 2, 2009

காதலுக்காக‌ நேர்ந்துவிடப்பட்ட கவிதைகள் நாம்...


எத்தனை முறை
ஒத்திகை பார்த்து தொடங்கினாலும்
எண்ணியதை எல்லாம்
சொல்லிவிட‌
ஏன் இந்த இயலாமை....

விட்டுக்கொடுக்க காத்திருக்கிறேன்
ஒரு சில சந்தர்ப்பங்களையாவது
விட்டுக்குக்கொடு
எனக்கும்..

காதலுக்காக‌
நேர்ந்துவிடப்பட்ட
கவிதைகள் நாம்...

என்னை கடந்து நீ
எத்தனை முறை சென்றாலும்
படபடக்கும்
இந்த இதயம்
உன் அருகில் இருக்கையில்
என்ன செய்ய போகிறதோ...

அம்மா பிடிக்குமா?
அப்பா பிடிக்குமா ?
தடுமாறும்
குழந்தையாய் நானும்..
உன் மௌனம் பிடிக்குமா இல்லை
உன் பேச்சு பிடிக்குமா
என்ற கேள்விகளூடன்
தடுமாறிக்கொண்டிறுக்கிறேன்...


என் வீட்டு ஜன்னலில்
இப்போதெல்லாம்
நிலவு வருவதில்லை
பதிலுக்கு உன் நினைவுகள்
ஏறி இருந்து
ஆர்ப்பட்டம் பண்ணுகின்ற‌ன‌

உன்னோட தடயங்களுடனேயே
உன்னையே
சிந்த்தித்துக்கொன்டிருந்த நான்
உன் சின்னங்களையே
பெற்ற பிறகு
எங்கே போவேன்...

என் நினைவு இல்லாமல் போகலாம்
உனக்கு அனால்
என்னை
நினைத்தது கூடவா
உன் நினைவில் இல்லமல் போகும்...